வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

543 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் வரும் மார்ச் 8ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வரும் எட்டாம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.இந்த தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும், வாக்கு எண்ணும் நாள் எப்போது, தேர்தல் முடிவுகள் எப்படி அறிவிக்கப்படும் என அனைத்து விவரங்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்படும். இந்த  செய்தியாளர்களை சந்திப்பு மார்ச் மாதம் 8ம் தேதி நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல்  மார்ச் மாதம் 10ம் தேதி விவரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. எப்போது நாமினேஷன் செய்யலாம், தேர்தல் எப்போது நடைபெறும், வாக்கு எண்ணிக்கை எப்போது நடக்கும், எத்தனை கட்டங்களாக நடைபெறும், தமிழ்நாட்டுக்கு எந்த தேதியில் நடைபெறும் என விவரங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படும். அந்த முக்கியமான செய்தியாளர்கள் சந்திப்பு வரக்கூடிய மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.