ஆந்திராவில் ஒரு 15 வயதுடைய பள்ளி மாணவி  வசித்து வருகிறார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தன்னுடைய தாயாருடன் வசித்து வருகிறார். இந்த மாணவியைக் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதோடு அந்த வாலிபரின் நண்பர்களும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். கிட்டத்தட்ட 2 வருடங்களாக அந்த மாணவியை 14 பேர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் மாணவி கர்ப்பமானார்.

அந்த மாணவி பயந்து போய் இதைப் பற்றி வெளியே சொல்லாத நிலையில் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் 14 பேர் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்த நிலையில் ஒரு சிறுவன் உட்பட 17 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.