கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி நாகம்மாள்(70). இந்த தம்பதியினருக்கு 4 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா உயிரிழந்தார்.

சமீப காலமாக தனது இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகவில்லை என நாகம்மாள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் புலம்பி வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகம்மாள் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று நாகம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.