மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இரண்டு பேரை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர்களை நிர்வாணமாக ஊருக்குள் அணிவகுத்துச் செல்லும் வீடியோ  சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே மைத்தேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்துக்கு கேட்டு போராடி வருகிறார்கள். அதற்கு சூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

இது வன்முறையாக வெடித்து மணிப்பூரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த வன்முறையில் ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சூகி பழங்குடியினராய் சேர்ந்த இரண்டு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்புகளின் கைவைத்து இழுத்துச் செல்லும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கொடூர செயலுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.