1990 ஆம் ஆண்டு சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளராக பெயர் பெற்ற முன்னாள் மும்பை வேக பந்துவீச்சாளர் அப்துல் இஸ்மாயில்(79) கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 1969 ஆம் ஆண்டு தொடங்கிய கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இவர் 75 முதல் தர போட்டிகளில் 18.08 சராசரியுடன் 244 விக்கெடுகளை வீழ்த்தினார்.

அந்தக் காலகட்டத்தில் மும்பை அணி 15 ரஞ்சி டிராபிக் பட்டங்களை வெல்லவும் உதவியாக இருந்தார். இவர் தனது அபாரமான ஸ்விங் பந்து வீச்சு மூலம் எதிர் அணிகளை திணறடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.