இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் தனது 30 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆன்மீக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து துவாரகா வரை 140 கிலோ மீட்டர் வரை நடை பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த பயணத்தை பகவான் கிருஷ்ணரின் புனித நகரமான துவாரகாவில் தரிசனம் செய்யும் நோக்கத்தில் அவர் மேற்கொண்டுள்ளார். இந்த நடைப்பயணத்தின் போது Z பாதுகாப்பும், உள்ளூர் காவல் துறையினரும் இவருக்கு தொடர்ந்து பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர் . இந்த நடை பயணத்தின் 5ம் நாளன்று இவர் மமிடி பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு பெரிய வண்டியில் 250 கோழிகளை இறைச்சிக்காக அழைத்துச் செல்லப்பட்டதை கண்டார்.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Varinder Chawla பதிவைப் பகிர்ந்துள்ளார் (@varindertchawla)

அதனால் திடீரென நடைபயணத்தை நிறுத்திய அவர் அந்த கோழிகளை வண்டி உரிமையாளரிடம் பேசி, தனது குழுவினரிடம் பணம் கொடுத்து விடுவிக்க செய்தார். பின்னர் அந்த பறவைகள் அனைத்தையும் தனது வன உயிரின புணர் வாழ்வு மையமான வந்தாராவுக்கு அனுப்பி வைத்தார். இவர் விலங்கு பாதுகாப்பு மற்றும் பசுமை சூழலை காக்கும் நோக்கத்தில் உருவாக்கிய வந்தாரா என்ற மையம் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய அரசின் பிராணி மித்ரா என்ற தேசிய விருதை பெற்றுள்ளது.

இது விலங்கு நலத்திற்காக வழங்கப்படும் இந்தியாவின் மிக உரிய விருதாகும். இதில் குறிப்பாக ஆன்மீகம் மட்டுமின்றி உயிரினங்களின் நலனில் ஆனந்த் அம்பானி தனது அக்கறையை காட்டுகிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பறவைகளை வந்தாராவிற்கு அனுப்பி வைத்த ஆனந்த் அம்பானி இளைஞர்களும் துவாரகாதிஷரிடம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கடவுளை நினைத்து செய்யும் எந்தவொரு செயலும் தடையின்றி நிறைவேறும் என்று தெரிவித்துள்ளார்.