நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் 13 ஆண்டுகளாக தன்னுடன் பள்ளியில் படித்த நபர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர், கேரளாவில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் என்றும், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு 4 ஆண்டுகள் கழித்து திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷே விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.