
10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரிசுகளை வழங்கியுள்ளார். இந்த பரிசளிப்பு விழா மாமல்லாபுரம் அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 12ஆம் வகுப்பில் 600-க்கு 599 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி ஓவியா அஞ்சலிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வைர காதணியை பரிசாக கொடுத்துள்ளார்.
பத்தாம் வகுப்பில் 500க்கு 499 மதிப்பெண் எடுத்த அரியலூர் மாணவி சோபியாவுக்கும் வைர காதணியை விஜய் பரிசாக கொடுத்துள்ளார். பரிசுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களும் பெற்றோர்களும் தங்களது மகிழ்ச்சியை கரகோஷம் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.