கர்நாடக மாநில ஹாசன் மாவட்டத்தில் மனதை கலங்கடிக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது ஷமந்த் கவுடா என்பவரின் பண்ணை வீட்டில் உள்ள கோழிப்பண்ணைக்குள் 12 அடி நீள ராஜநாகம் ஒன்று நுழைந்தது. அப்போது அந்த இடத்தில் ஷமந்த் கவுடாவின் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த வளர்ப்பு நாய் ‘பீமா’, குழந்தைக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக ராஜநாகத்துடன் சுமார் 40 நிமிடங்கள் கடும் போராட்டம் நடத்தியது.

அந்த சண்டையில் பீமா ராஜநாகத்தை 10 துண்டுகளாக குதறி கொன்றது. ஆனால், அதே நேரத்தில் பாம்பின் விஷம் பீமாவிற்கு ஏறியதால் அது பரிதாபமாக துடிதுடித்து  உயிரிழந்தது. பீமா இற்குமுன் இந்த பண்ணையில் நுழைந்த 15 விஷ பாம்புகளை இதேபோன்று தைரியத்துடன் எதிர்கொண்டு கொன்றிருக்கிறது என அதன் உரிமையாளர் பெருமையாக தெரிவித்தார். மேலும் உரிமையாளர் குடும்பத்தின் உயிரை காக்க வளர்ப்பு நாய் உயிரை விட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.