![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/05/f5b4bec7-4276-4e7a-a356-cb66a193afa4.jpg)
தமிழகத்தில் பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பாஸ் வழங்கும் பணி ஆரம்பித்துள்ளது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேரில் சந்திக்கும் விழாவானது ஜூன் 15 முதல் 20ஆம் தேதிக்குள் நடக்கலாம் என்று தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை விரைவில் சந்திப்பேன் என்று நடிகர் விஜய் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.