தென் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், இப்போது பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை குஷ்பூ. தற்போது குஷ்பூ வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்று திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் குறித்து நேர்காணலில் நடிகை குஷ்பூ பகிர்ந்துள்ள தகவல் வைரலாக பரவி வருகிறது. அதாவது, வாரிசு படப்பிடிப்பில் இறுதிகட்ட சூட்டிங்போது தளபதி விஜய் அவர்களுக்கு 103 டிகிரி அளவிற்கு காய்ச்சல் இருந்தது.

எனினும் படப்பிடிப்பை நிறைவு செய்யும் வரை அவர் நடுநடுவில் தரையில் பெட்ஷீட் போட்டு படுத்து ஓய்வெடுத்துக் கொண்டு, அவரது காட்சிகளை முழுவதும் நடித்து முடித்தார். அவரது கடின உழைப்புதான் இந்த வெற்றிக்கு காரணம் என குஷ்பு சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.