
தமிழகத்தில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஏராளமான மாணவ மாணவிகள் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் தமிழ் துரை என்ற மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தான்.
இந்த சிறுவன் தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில் மாதம் 25ஆம் தேதி கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த மாணவன் இன்று வெளியான தேர்வு முடிவில் 500க்கு 313 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் இதனை நினைத்து அவரது பெற்றோர்கள் மிகவும் மன வேதனையில் இருக்கிறார்கள்.