மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தலுக்கான வேளையில் இறங்கிவிட்டனர். அந்தவகையில் தமிழகத்தில் திமுக,அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. திமுக நேற்று கூட்டணியை நிறைவு செய்து விட்டது. மேலும் ஒருசில கட்சிகள் மற்ற கட்சிக்கு தாவி வருகிறார்கள். அந்தவகையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இணைந்தனர்.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர், திமுக வழக்கறிஞர்கள், சமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.