
டெல்லி நபி கரீம் பகுதியில் உள்ள ஹோட்டலில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹோட்டலில் தங்கிய காதலர்கள் இடையே, நேற்று காலை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்தப் பெண் வேறொரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, காதலன் சந்தேகம் கொண்டுள்ளார். விவாதம் வன்முறையாக மாறியதும், காதலன் தனது காதலியை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இந்த சம்பவம் நபி கரீம் பகுதியில் உள்ள ஆரக்ஷன் சாலையில் அமைந்த ஹோட்டலில் நிகழ்ந்தது. சனிக்கிழமை மாலை 4.15 மணிக்கு ஹோட்டலில் தங்கிய இருவரும், இரவு பீட்சா மற்றும் லஸ்ஸி ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை 9.47 மணியளவில் ஹோட்டல் ஊழியர்கள் அந்த நபர் காணாமல் போனதை கண்டனர். பின்னர் குளியலறையை சோதனையிட்ட போது, பெண் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஹோட்டல் வரவேற்பறையில் சமர்ப்பித்த ஆதார் அட்டைகள் மூலம் இருவரின் அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டது. பெண்ணின் பெயர் சரிகா, சாந்திநகர் பகுதியில் வசிப்பவர்.
குற்றவாளியான சச்சின் மல்ககஞ்ச் பகுதியில் வசிப்பவர். போலீசார் 2 மணி நேரத்தில் அவரை பிடித்து கைது செய்தனர். பிரேத பரிசோதனைக்காக சரிகாவின் உடல் லோக் நாயக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சம்பவ இடத்தில் குற்றப்புலனாய்வு குழு ஆதாரங்களை சேகரித்து முழுமையான விசாரணையை மேற்கொண்டுள்ளது.