ஹால் ஆப் பேம் என்ற கௌரவ பட்டியலில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை இணைத்து ஐசிசி கௌரவம் அளித்து வருகிறது. அந்த வகையில் புதிதாக 7 வீரர்கள் அந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.

முக்கியமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஹால் ஆப் பேம் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, தோனி டக் அவுட் ஆனாலும், உலக கோப்பையை வென்றாலும், இரட்டை சதங்களை விளாசினாலும் ஒரே மாதிரி தான் இருப்பார். வெற்றியானாலும், தோல்வியானாலும் மாறாமல் இருப்பவர். பிக் பாக்கெட் அடிப்பவர்களின் கைகளை விட கீப்பிங் செய்யும்போது தோனியின் கைகள் வேகமாக செயல்படும் என கூறியுள்ளார்.