
மேகலாயாவிலுள்ள சில்லாங் பகுதிக்கு ஹனிமூன் சென்ற போது கணவனை தீர்த்து கட்டிய சோனம் வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜா ரகுவன்சி என்பவருக்கு சோனம் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இதில் சோனத்திற்கு ஏற்கனவே தன்னுடைய அப்பாவின் கடையில் வேலை பார்த்து வந்த ஒரு வாலிபரை காதலித்தார்.
இதனால் தான் தன் காதலனுடன் சேர்ந்து 20 லட்ச ரூபாய்க்கு கூலி ஆட்களையே ஏவி கணவனை தீர்த்து கட்டியுள்ளார். இந்த கொலை வழக்கில் சோனம், அவரது கள்ளக்காதலன் ராஜ் குஷ்வாகா உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தினசரி இந்த வழக்கில் புதிய தகவல்கள் வெளிவந்து பபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ராஜா ரகுவன்சி (29) என்பவருக்கும் சோனத்திற்கும்(24) இடையே கடந்த மே மாதம் 11ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் பின்னர் ஹனிமூனுக்காக ஷில்லாங் சென்றனர். கடந்த மாதம் 20ஆம் தேதி மேகாலயா சென்ற நிலையில் 23ஆம் தேதியிலிருந்து அவர்கள் உறவினர்களை தொடர்பு கொள்ளாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசுக்கு புகார் கொடுக்கவே அவர்கள் விசாரணை நடத்தியதில் ராஜா ரகுவன்சி சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவி தறைமறைவாகிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.
கடந்த இரண்டாம் தேதி போலீசார் ராஜாவின் சடலத்தை கண்டறிந்த நிலையில் அவரது மனைவியை கைது செய்து அதன் பின்னர் அவரது காதலனான ராஜா குஷ்வாக மற்றும் கூலிப்படையினரையும் கைது செய்தனர். அதாவது 14 லட்சம் ரூபாய் பேரம் பேசிய சோனம் பின்னர் 20 லட்சம் ரூபாய் பணம் தருவதாக கூறி கூலிப்படையினரை ஏவி தன் கணவனை கொலை செய்துள்ளார். அதன்படி தன் கணவனை திட்டமிட்டு தேனிலவுக்கு அழைத்துச் சென்று அங்கு கூலி ஆட்களை வரவழைத்து கணவனை தீர்த்து கட்டினார்.
அவர்கள் கணவனை கொலை செய்யும்போது அதனை சோனம் அருகில் இருந்து ரசித்து பார்த்துள்ளார். பின்னர் கூலிப்படையைச் சேர்ந்த விஷால் (22), ஆனந்த் (23), ஆகாஷ் (19) ஆகியோருக்கு 15,000 பணம் கொடுத்த நிலையில் பின்னர் தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் அவர்களிடம் கழட்டி கொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் அனைவரையும் போலீசார் கைது செய்த நிலையில் தன் கணவனை கொலை செய்யும்போது அருகில் இருந்து சோனம் ரசித்துப் பார்த்த தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருமண நாளிலேயே கணவனை தீர்த்து கட்ட சோனம் திட்டம் தீட்டியதும் முதலில் பிளான் ஏ மற்றும் அடுத்து பிளான் பி என இரண்டு திட்டங்களையும் வகுத்துக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.