புனித ஹஜ் யாத்திரை இஸ்லாமியர்கள் வருடம் தோறும் சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டு புனித ஹஜ் பயணத்தின் போது 68 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா தூதரக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஹஜ் பயணத்தின் போது கடும் வெயில் காரணமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  அவர்களில் அவர்களில் 323 பேர் எகிப்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஊடக அறிக்கையின்படி, இந்த ஆண்டில் மொத்தம் 645 பேர் இறந்துள்ளனர்.