
சென்னை, மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்துள்ள பகுதி ஆகும். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் சென்னையின் மிக முக்கிய பகுதியான தி நகரில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மல்டி லெவல் பார்க்கிங் வசதி கட்டடம் அப்பகுதியில் கட்டப்பட்டது. இது அங்குள்ள மக்கள் அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் இருந்தது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு குறைந்தது.
இதைத்தொடர்ந்து பராமரிப்பு செலவு அதிகமாகவும் மக்களின் பயன்படுத்துதல் குறைவாகவும் காணப்பட்ட நிலையில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி தற்காலிகமாக மூடப்பட்டது. எனவே அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் தங்களுடைய வாகனங்களை சாலைகளில் நிறுத்தி வருவதால் போக்குவரத்து பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.