காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற 12 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் மணிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து வருவதால் மாணவர்களுக்கு மதியம் தான் வகுப்புகள் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக சிறுவன் தமிழரசன் வீட்டில் ஹீட்டர் போட்டுள்ளான்.

அதாவது குளியல் அறையில் வெந்நீர் போட்டு குளிப்பதற்காக ஹீட்டர் போட்டான். அப்போது தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை தெரிந்து கொள்வதற்காக ஹீட்டரை ஆஃப் செய்யாமலேயே சிறுவன் தண்ணீர் பக்கெட்டில்  கை வைத்தான். அப்போது மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானான். மேலும் இது தொடர்பாக மணிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.