கேரளாவில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அப்படியே சரிந்து ஸ்கூட்டியில் படுத்தபடியே நின்றார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது அவர் மயங்கி கிடப்பது தெரிய வந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஸ்கூட்டியை சோதித்ததில் அவரது ஹெல்மெட்டில் ஒரு பாம்பு இருந்தது தெரிய வந்தது. இந்த பாம்பு அவரை கடித்ததால் தான் அவர் மயங்கி கிடந்துள்ளார். அவரின் தலையில் பாம்பு கடித்த நிலையில் ஹெல்மெட்டில் இருந்து பாம்பைப் பின்னர் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.