மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், ‘லேடி கேங்’ (Lady Gang) என்ற பெண்கள் குழு ஒன்று, சமூக ஊடகங்களில் பிரபலமானவர்கள் ஆவதற்காக, இளம் பெண்களைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கடத்தி, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அழைத்துச் சென்று வன்முறையாகத் தாக்கி, அதை வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களை கால் மற்றும் கையால் உதைப்பது, அவர்கள் முகத்தில் சிகரெட் புகையை ஊதுவது போன்ற காட்சிகள் இந்த வைரல் வீடியோக்களில் பதிவாகியுள்ளன.
#WATCH | ‘Lady Gang’ K*dnaps Girls, Hits Them To Go Viral On Social Media In Jabalpur #MPNews #MadhyaPradesh pic.twitter.com/C9Pr5B1hVD
— Free Press Madhya Pradesh (@FreePressMP) November 23, 2025
சமூக ஊடகங்களில் இந்த வீடியோக்கள் பரவலாகப் பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் குவாரிஹாட் (Gwarighat) காவல் நிலையத்தை அணுகி முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தார்.
இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட மூன்று பெண்களைக் கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக இளம் பெண்களைக் குறிவைத்துத் தாக்குதல் மற்றும் சித்திரவதை செய்த இந்தக் கும்பலின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
