
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் ராஜ். இவரது மனைவி ஜானகி. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் மகன் உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்து கணேஷ் ராஜ் வீட்டிற்கு வந்தார். அப்போது ஜானகி தலையில் படுகாயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்த கணேஷ் ராஜ் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஜானகியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜானகியின் இறப்பு பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.