கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொழிலதிபரான பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பார்த்திபன் இன்ஜினியராக உள்ளார். இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஹர குமார் என்பவர் மத்திய அரசு நிறுவனத்தின் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பார்த்திபன் உள்ளிட்ட 18 பேரிடம் 1.65 கோடி ரூபாய் வரை பணத்தை வாங்கி போலியான பணி நியமன ஆணையை கொடுத்து ஏமாற்றியுள்ளார்.

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் 18 பேரும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விசாரித்த போது அது போலியான பணி நியமன அணை என்பது உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்ட 18 பேரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஹரிஹர குமாரை கைது செய்தனர். வேலைவாய்ப்பு தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.