மணிப்பூரில் மே மாதம் தொடங்கிய கலவரம் இன்றுவரை  நீடித்து வருகிறது. இந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவத்தினர் இறக்கப்பட்டனர். இந்நிலையில் இளம்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியானதை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த சதீஷ் பிரசாத் எனும் மூத்த அதிகாரி இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியது நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உயர் அதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.