
ஹரியானாவில் உள்ள திவானி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் பிரவீன். இவரது மனைவி ரவீனா. ரவீனா யுடியூபராக செயல்பட்டு வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். அதனை அடுத்து ரவீனாவின் ஆன்லைன் வீடியோக்கள் குறித்து அடிக்கடி கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரவீனா, சுரேஷ் என்பவர் உடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனைஅடுத்து கடந்த மார்ச் 25ஆம் தேதி ரவீனா தனது காதலர் சுரேஷுடன் தொடர்பில் இருந்ததை நேரில்பார்த்த பிரவீன் அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்ததாகவும், அதைத்தொடர்ந்து ரவீனா மற்றும் சுரேஷ் சேர்ந்து பிரவினை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.
हरियाणा के भिवानी में एक महिला ने अपने यूट्यूबर प्रेमी के साथ मिलकर पति की गला घोंटकर हत्या कर दी. शव को बाइक पर ले जाकर नाले में फेंका.
मामला तब खुला जब सीसीटीवी में रवीना और प्रेमी शव के साथ नजर आए. पुलिस ने रवीना को गिरफ्तार कर जेल भेजा, प्रेमी सुरेश फरार है.#Haryana… pic.twitter.com/YTXRuIgTcN
— AajTak (@aajtak) April 15, 2025
பிரவினின் உடலை இருவரும் ஒரு பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்று அருகில் உள்ள ஒரு கழிவு நீர் கால்வாயில் வீசி உள்ளனர். அதன் பின் 3 நாட்கள் கழித்து அவ்விடத்தில் கெட்டுப்போன நிலையில் பிரவினின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த விசாரணையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ரவீனா மற்றும் சுரேஷ் பிரவீனின் உடலை பைக்கில் ஏற்றி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து ரவீனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த யுடியூபரான சுரேஷ் தலைமறைவாகிய நிலையில் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கள்ளக்காதல் தொடர்பால் கணவனை, மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.