
மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத்தில் கடந்த ஜூன் 2ஆம் தேதி மாலை ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டது… இந்த சம்பவம் சிசிடிவி-யில் பதிவாகியுள்ள நிலையில் காண்போரை சற்று நேரம் கலங்கவைத்தது என்றே கூறலாம். அதில் ரயில்வே நிலையத்தில், பார்வைத் குறைபாடு உள்ள சித்தநாத் மேனே (வயது 30) என்பவர் நடந்து செல்லும் போது திடீரென தண்டவாளத்தில் விழுந்தார்.
🚨 Close Call on the Tracks
A visually impaired man fell onto the railway tracks but was swiftly rescued by a brave Maharashtra Security Force jawan with the help of alert locals. 🙌
Timely action saved a precious life. pic.twitter.com/Y1BdcfsjAx
— सनातनी हिन्दू राकेश 100% Follow Back (@modified_hindu6) June 12, 2025
“>
அச்சமயம் ஒரு ரயில் வருவதாக அறிவிப்பு ஒலித்தது. ரயில் வரும்போது மேனே தடத்தில் விழுந்ததால், அவரது உயிருக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டகூடிய சூழ்நிலையில் அங்கு பணியில் இருந்த மகாராஷ்டிரா பாதுகாப்புப் படை (MSF) வீரர் அமோல் டியோரே, நேர்த்தியாக மற்றும் தைரியமாக தடத்தில் குதித்து, மேனேவைக் காப்பாற்ற முயற்சித்தார்.
ரயில் லோகோ பைலட்-க்கு சிக்னல் கொடுத்து ரயிலை நிறுத்தச் செய்தார். பின்னர் மற்ற பயணிகளும் ஓடி வந்து, மேனேவை பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த இக்கட்டான சமயத்தில் தனது உயிரை பொருட்படுத்தாமல் தைரியமான செயல்பட்ட, அமோல் டியோரேவுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தது . “உடனடி சிந்தனை, தைரியம், மனிதநேயம் – இவை இணைந்தால் உயிரை பாதுகாக்க முடியும்” என்பதற்கு இது சிறந்த உதாரணம் என பலர் பாராட்டியுள்ளனர்.