
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் மக்கள் கூட்டம் நேற்று இரவு முதல் மாநாட்டு திடலில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வந்தது நிலையில், இன்று காலை முதல் ஏராளமான மக்கள் தொடர்ச்சியாக மாநாட்டு திடலை நோக்கி திரண்டு வர சில இளைஞர்கள் மயக்கம் அடைய மாநாட்டு திடலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பலமுறை மேடைகளில் அமைதியாக உட்காரும்படி வருகை தந்த மக்கள் மற்றும் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் இருப்பினும் சூழ்நிலை சரிவராத காரணத்தால், விஜய் அவர்களே நேரடியாக தற்போது மாநாட்டு திடலுக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த வருகை தந்துள்ளார்.
வெள்ளை சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் உடையில் அவர் வந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. மாநாடு திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே தொடங்கும்படி நிர்வாகிகளிடம் அவர் அறிவுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
Exclusive: @actorvijay #Thalapathy #Vijay from #TVKMaanaadu pic.twitter.com/kPqa2gvh82
— Heytamilcinema (@heytamilcinema) October 27, 2024