வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவரை சேர்ந்த புண்ணியகோடி என்ற 46 வயது நபர் தனது நண்பர்களுடன் தரிசனம் முடித்துவிட்டு மலையேற தொடங்கினார். அப்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட மயக்கமடைந்த அவரை நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். வெள்ளியங்கிரி மலையில் இது ஒன்பதாவது உயிரிழப்பு ஆகும்.