நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை மீட்ட கனிமொழி, அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.

அவருக்கு சில நாட்கள் முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க அவர்களின் வீட்டிற்கு சென்ற கனிமொழி, அவர்களிடம் நலம் விசாரித்தார். அப்போது குழந்தைக்கு கனிமொழி என்று பெயர் சூட்ட குழந்தையின் தாய் வேண்டுகோள் வைத்த நிலையில், அவர் கனிமொழி என்று பெயர் சூட்டினார்.