இந்தியாவில் யுபிஐ மூலமாக பணப்பரிவத்தினை சேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட மின்னணு பணப்பரிவர்த்தனை சேவையை மேம்படுத்தும் நோக்கத்தில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரிட்டன் நாட்டில் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பிரிட்டன் செல்வம் இந்தியர்கள் யுபிஐ சேவை மூலம் பணப்பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளலாம். அடுத்ததாக பிரான்ஸ் நாட்டிலும் யுபிஐ சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை பார்க்க விரும்புபவர்கள் யுபிஐ மூலமாக பணம் செலுத்திய டிக்கெட்டுகளை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது