SETC பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயணிகள் கூடுதலாக 40 ரூபாயை  செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சென்னையின் பிற இடங்களுக்கு செல்லலாம். அதுமட்டுமின்றி பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கும் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கலாம்.

இந்த டிக்கெட்டை 4 மணி நேரத்திற்குள் பயன்படுத்தி பயணித்துக்கொள்ளவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டமானது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.