மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி. இவர் திருச்சூரில் நடைபெற்ற பூரம் திருவிழாவிற்கு ஆம்புலன்ஸில் சென்றுள்ளது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது பூரம் திருவிழாவில் இரு திறப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் திருச்சூருக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் முதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்துவதற்காக சுரேஷ்கோபி அங்கு சென்றார். அவர் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஆம்புலன்ஸில் சென்றார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையாக மாறிய நிலையில் அரசு வாகனத்தை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது குறித்து சுரேஷ்கோபி கூறும் போது, பூரம் திருவிழாவில் நடந்த குளறுபடிக்கு பின்னால் சதி இருக்கிறது. இதில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். அந்த பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் நான் ஆம்புலன்ஸில் சென்றேன் என்று கூறியுள்ளார்.