
உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதாவது சதார் கோட்வாலி பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், போலீசாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி கேதிக் கரவுசியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், அவரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போது, போலீசார் தங்கள் பைக்கை அவரிடம் ஓட்டச் செய்து, அவர்கள் இருவரும் பின்னால் அமர்ந்தனர். குற்றவாளி கைவிலங்குடன் பைக்கை ஓட்டுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி விரைவாக வைரலானது. வீடியோவில் குற்றவாளி பைக்கை ஓட்ட, இரண்டு போலீசார் அவருடைய பின்னால் அமர்ந்திருப்பது தெளிவாக காணப்பட்டது. இதில் அனைவரும் ஹெல்மெட் அணியாமல் இருப்பது, பாதுகாப்பு விதிகளை முற்றிலும் மீறியதைக் காட்டியது. பொதுமக்கள் இந்த காட்சியை வீடியோபதிவு செய்து இணையத்தில் பதிவேற்றினர். “ஒரு சாதாரண நபர் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது, ஆனால் காவல்துறையினரே விதிகளை மீறினால் என்ன?” எனக் கேட்டனர். இந்த வீடியோவை உத்திரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியும் தங்கள் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோ எஸ்பி முகமது முஷ்டாக் கவனத்திற்கு சென்றதும், சம்பந்தப்பட்ட தலைமை காவலரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து, அவர்மீது துறை ரீதியான நடவடிக்கையைத் தொடங்கினார். மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளார்.
ललितपुर में एक अपराधी जेल जाते समय खुद ही गाड़ी चला रहा है और दो पुलिसकर्मी आराम से पीछे बैठे हैं।
हमने पहले ही कहा था- बाबा जी की सरकार अपराधी ही चला रहे हैं। pic.twitter.com/GFXyk3TZdQ
— UP Congress (@INCUttarPradesh) June 14, 2025