
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நரசிம்மா நகரில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் விக்னேஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. விக்னேஷ் நேரில் பார்க்க வேண்டும் என மாணவியை அழைத்துள்ளார். இதனை அடுத்து நேரில் வந்த சிறுமியை விக்னேஷ் தனியாக அழைத்துச் சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு விக்னேஷ் சிறுமியுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சிறுமி விக்னேஷை மிரட்டியுள்ளார்.
அப்போது விக்னேஷ் நீ வீட்டை விட்டு வெளியே வந்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியதாக தெரிகிறது. இதனை நம்பி சிறுமி வீட்டை விட்டு வந்துள்ளார். அப்போது விக்னேஷ் தனது நண்பருடன் இணைந்து தலையணையால் முகத்தில் வைத்து அழுத்தி சிறுமியை கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விக்னேஷ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.