ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில், மைனர் சிறுமி மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, மே 30ஆம் தேதி தனது தோழியுடன் டெல்லிக்கு செல்வதற்காக பேருந்தில் பயணித்தார். ராஞ்சி நகரி காவல் நிலைய எல்லையில் உள்ள லால்குட்வா ஏரி அருகே இருவரும் இறங்கிய பின்னர், ஹதியா ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சென்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமி டெல்லிக்கு செல்லாமல் தனது தோழியுட் தனியாக ரயிலில் சென்றார்.

பின்னர் அந்த சிறுமி தனது வீட்டிற்குத் திரும்பும் நோக்கில் ரயிலில் இருந்து இறங்கி தனியாக மற்றொரு ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோவில் ஓட்டுநருடன், மற்றொரு இளைஞனும் இருந்தார். அவர்கள் இருவரும், சிறுமியை வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி நம்பவைத்து, பெடோ மற்றும் இட்கி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அழைத்துச் சென்றனர். அங்கு இரவு முழுவதும் இருவரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர் என கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் மாநிலமெங்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மறுநாள், ரட்டு பகுதியில் உள்ள முருகு பாலம் அருகே சிறுமியை வெறிச்சோடிய இடத்தில் இறக்கிவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் உள்ளூர் மக்களின் உதவியுடன், அந்த சிறுமி ரட்டு காவல் நிலையத்தை அடைந்து, போலீசாரிடம் புகார் அளித்தார். அவருடைய புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். தொழில்நுட்ப நுட்பங்களின் உதவியுடன், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.