விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தலகுண்டு கிராமத்தில் மார்க்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பாப்பா என்ற 19 வயது மகள் இருந்துள்ளார். இவர் ஒரு அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில் அவர் தன் வீட்டின் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்துவிட்டது. இதில் மயங்கி விழுந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி கண் பார்வையை இழந்ததாக கூறினர்.

பின்னர் சிறிது நேரத்தில் மாணவியும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி டாக்டர்கள் கூறும் போது கண்ணாடிவிரியன் அல்லது கொடிய விஷம் உள்ள பாம்பு ஏதாவது மாணவியை கடித்திருக்கலாம் என்றும் அதனால் தான் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.