நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது X பதிவில், ரூ.75,000 கோடி செலவில் ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ‘பிரதமர் சூர்யா கர்’ எனும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெற https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு பதிவிட்டுள்ளார்.