மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்தத் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். நாடு முழுவதும் சொந்த நிலம் உள்ள விவசாய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கான  செயலில் இந்த திட்டம் இருந்து வருகிறது.

மேலும் அது சார்ந்த பணிகளுக்கான செலவுகளை செய்து கொள்ளவும் இந்த பணம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் 17வது தவணையானது ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் மத்திய அரசால் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி வந்தது. தற்போது வரை இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமே வெளியாகவில்லை. கடந்த முறைக்கு வங்கி கேஒய்சி செய்தது போல இந்த முறை இ-கேஒய்சி மற்றும் நில பதிவுகளை சரிபார்ப்பு செய்ய வேண்டியது கட்டாயம். இ-கேஒய்சி செய்ய விரும்புவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.