மத்திய, மாநில அரசவுகளானது விவசாயிகளுக்காக பல்வேறு நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் வகையில், ‘கிசான் கிரெடிட் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் 7 சதவீத வட்டியுடன் ரூ.3 லட்சம் வரை உரிய காலத்தில் கடன் பெறலாம்.

விவசாயிகள் எந்தவிதமான பாதுகாப்பு வைப்புத் தொகையும் செலுத்தத் தேவையில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் 3 சதவீத வட்டிச் சலுகை கிடைக்கும். இது பிரதம மந்திரி பசல் பீமா யோஜனாவுடன் இணைக்கப்பட்டது. இந்த கடன் தொகை குறித்த கூடுதல் விவரங்களுக்கு உள்ளூர் வங்கிகளை அணுகலாம்.