எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்த ஏழு விவசாய தொழிலாளர்கள் விளைநிலம் மானியத்துடன் குறைந்த வட்டியில் கடன் வடகம் வாங்குவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதாவது பிறர் சமூகத்தினிடமிருந்து விலை நிலங்களை எஸ்சி, எஸ்டி மக்கள் வாங்கும் பொழுது நிலங்களுக்கான முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் செலுத்துவதில் முழு விலக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

நிலத்தின் சந்தை மதிப்பிற்கு ஏற்றவாறு 50 சதவீதம் வரையிலும் அதிகபட்சமாக 5 லட்சம் வரையிலும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  மானியம் போக மீதம் இருக்கும் தொகையை விவசாயிகள் கடனாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் அறிவித்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விவசாயிகளுக்கு 6% வட்டி வசூலிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.