நாடு முழுவதும் தக்காளி விலையானது வரலாறு காணாத விலை உயர்வை எட்டியுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் காய்கறி விலை, பழங்கள் விலை, மளிகை பொருட்கள் விலை என அடுத்தடுத்து விலை ஏற்றம் மக்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காது என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, காய்கறி விலை அதிகரிப்பால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான்,” மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. விலைவாசி உயரும் நேரத்தில் மக்கள் சிரமப்படுவது போல் இல்லை” என கூறியதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்