
வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனோயில் நொய் பாய் என்ற விமான நிலையம் உள்ளது. அது நாட்டின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். இன்று காலை அந்த விமான நிலையத்தில் இருந்து டியன் பியன் நகருக்கு ஏ-321 என்ற விமானம் புறப்படுவதற்காக தயாராக நின்று கொண்டிருந்தது.
அப்போது ஹோ சி நகரத்துக்கு புறப்பட்ட விமானம் ஏ-321 விமானத்தின் மீது உரசியதால் விமானத்தின் இறக்கை சேதமடைந்தது. இந்த விமானம் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒன்றாகும். இரண்டு விமானங்களிலும் ஏறக்குறைய 350 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
அவர்களுக்கு எந்த வித உயிர் சேதமும் ஏற்படாமல் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ஏ-321 விமானம் ஓடுபாதையில் சரியாக நிறுத்தப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது.
எனவே விபத்துக்குள்ளான இரண்டு விமானத்தின் 4 விமானிகளை பணியிடை நீக்கம் செய்து ஏர்லைன்ஸ் நிறுவனம் உத்தரவிட்டது. இதனால் அந்த விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.