குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து பயணிகள் விமான பணியாளர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தை குஜராத் ஆரவல்லி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தற்செயலாக படம் பிடித்துள்ளார்.

கடந்த 12-ஆம் தேதி சிறுவன் ஆர்யன் அகமதாபாத்தில் தங்கி இருக்கும் தனது தந்தையை பார்க்கவும் 12 ஆம் வகுப்புக்கான பாட புத்தகங்களை வாங்குவதற்காகவும் வந்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரான சிறுவனின் தந்தைக்கு சமீபத்தில் தான் அகமதாபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் காவலாளியாக வேலை கிடைத்தது.

விமானம் விழுந்த மருத்துவ கல்லூரிக்கும் விமான நிலையத்திற்கும் இடையே உள்ள 2 மாடி வீட்டில் அவர்கள் வசித்து வருகின்றனர். விபத்தை நேரில் பார்த்த சிறுவன் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை என கூறியுள்ளார். மேலும் தந்தையின் வீட்டிற்கு வந்த சில நிமிடங்களில் விமானம் ஒன்று வீட்டிற்கு மேலே பறந்து வந்ததை பார்த்தேன்.

அதை அருகில் பார்க்கும் ஆசையில் மாடிக்கு வேகமாக சென்றேன். இதுவரை நான் விமானத்தை அருகில் பார்த்தது கிடையாது. அதை செல்போனில் வீடியோ எடுத்தேன். திடீரென அந்த விமானம் கீழ்நோக்கி சென்றது. அது தரையிறங்கும் என நினைத்தேன்.

ஆனால் விமானம் வெடித்து சிதறியது என் கண்முன்னே நிற்கிறது. என கூறியுள்ளார். என்றாவது ஒருநாள் விமானத்தில் செல்ல வேண்டும் என ஆரியன் ஆசைப்பட்டார். ஆனால் இனி விமானத்தில் பயணிக்கவே கூடாது என்ற மனநிலைமைக்கு சிறுவன் வந்ததாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.