நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த புகாரை வாபஸ் பெற்றாலும், சீமான் வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். சீமான் மீது அளித்திருந்த பாலியல் புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் இந்த வழக்கில் சட்ட நிபுணர்களின் ஆலோசனை தேவை என கூறப்பட்டுள்ளது. இதனிடையே விஜயலட்சுமியின் புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.