நீரிழிவு பிரச்சனையால் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வந்த விஜயகாந்துக்கு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகள் ரத்த ஓட்டம் சீராக இல்லை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி கேப்டனின் வலது காலில் இருந்து மூன்று விரல்கள் அகற்றப்பட்டது. அதன் பிறகு தான் அவர் நாற்காலியில் அமர்ந்தபடியே இருந்தார். இன்று இந்த மண்ணுலகை விட்டு பிரிந்த அவரின் மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் சிந்துகிறது.