விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய வாராந்திர அதிவிரைவு ரயில் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர அதி விரைவு ரயிலும், மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.