
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று சொல்வார்கள். அதனை செயல்முறைப்படுத்த ஜப்பானில் ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாள் சிரிப்பின் மூலம் ஆரோக்கியம் மேம்படும் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் 2025 புத்தாண்டு பிறக்க இருப்பதால் 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட மனக்கசப்புகள் கவலைகள் போன்றவற்றை மறக்க ஜப்பானில் திருவிழா ஒன்று நடைபெற்றுள்ளது.
அந்த திருவிழாவில் மக்கள் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழ்ந்தனர். இந்த திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுமார் 20 நிமிடங்கள் வரை வாய்விட்டு சிரித்து தங்கள் துயரங்களை மறந்தனர்.