
பொதுத்துறை வங்கிகளில் முதலிடத்தை பிடிக்கும் வகையில், கனரா வங்கி பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இன்று (ஜூன் 1, 2025) முதல், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்கான அபராதம் முற்றிலும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கை சாதாரண சேமிப்பு, ஊதிய கணக்குகள் மற்றும் NRI சேமிப்புக் கணக்குகள் என அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் பொருந்தும்.
இது வரை நகர பகுதியில் ரூ.2,000, நாட்டு நகர பகுதிகளில் ரூ.1,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ.500 என்ற மாத சராசரி இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
Feel the freedom, bank the difference.
Starting 1st June 2025, Canara Bank offers no penalty on non-maintenance of minimum balance.
Applicable to all Savings Bank Account holders!#CanaraBank #YourAccountYourFreedom #PenaltyWaiver pic.twitter.com/fAALUO80MZ
— Canara Bank (@canarabank) June 1, 2025
ஆனால் புதிய கொள்கையின் கீழ், இனி எந்தவிதமான AMB (Average Monthly Balance) அபராதமும் விதிக்கப்படாது. இதனால் வாடிக்கையாளர்கள் கட்டுப்பாடின்றி சேமிப்புக் கணக்கை வைத்திருக்க முடியும்.
இந்த முடிவு மாணவர்கள், ஊதியம் பெறுவோர், மூத்த குடிமக்கள், NRI-க்கள் மற்றும் புதிய வங்கி கணக்குத் தொடங்குபவர்களுக்கும் மிகவும் பயனளிக்கவுள்ளது. “Feel the freedom, bank the difference” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள கனரா வங்கி, வாடிக்கையாளர் முதன்மை நுழைவுத் தளமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது.