பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர்-தீபிகா படுகோனே. இதில் நடிகை தீபிகா படுகோனே தற்போது பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பதான் மற்றும் ஜவான் போன்ற திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. கடந்த 2018-ம் ஆண்டு தீபிகா மற்றும் ரன்பீர் கபூர் ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக தீபிகா படுகோனே அறிவித்தார். அதோடு குழந்தையை செப்டம்பர் மாதம் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தார்கள்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தீபிகா தளர்வான உடைகளை அணிந்து வந்தார். இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டது. இந் நிலையில் தற்போது தீபிகா சிங்கம் அகெய்ன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் போலீஸ் வேடத்தில் அவர் நடிக்கும் நிலையில் தற்போது படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தீபிகாவும் கர்ப்பமாக இல்லை என்றும் அவர் வாடகை தாய் மூலமாகத்தான் குழந்தையை பெற்றெடுக்கப் போகிறார் என்றும் கூறி வருகிறார்கள். மேலும் வாடகைத்தாயின் மூலமாக குழந்தையை பெற்றெடுக்கும் உண்மையை தீபிகா மறைக்கிறார் என்று சிலர் கருத்து தெரிவித்து வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.