
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டக்காடு பகுதியில் அரிய வகை வனவிலங்குகள் பல உள்ளன. அந்த பகுதியில் வனச்சரக அலுவலராக துரைமுருகன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் என்.எஸ். தோட்டம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருவர் வளர்ப்பு நாய்களைக் கொண்டு உடும்பு வேட்டையாடிக் கொண்டிருந்தனர்.
இதனைப் பார்த்த துரைமுருகன் உடும்புகளை வேட்டையாடிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். அவர்களிடம் விசாரணை நடத்திய போது இருவரும் அதே பகுதியை சேர்ந்த காத்தான் மற்றும் அவரது மகன் அருள்குமார் என்பது தெரியவந்தது.
இருவரும் உடும்புகளை வேட்டையாடி அவற்றை சமைத்து சாப்பிட முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. எனவே வனத்துறை அதிகாரிகள் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்பு கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.